அதிரை M.M.இப்ராஹீம் தலைமையில் சேது ரோடு காம்ப்ளெக்ஸ்யில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைத்தலைவர் அதிரை M.M.இப்ராஹீம் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஆலிம் M.முகம்மது காசிம் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டமொத்தமாக விடுதலை தமிழ்புலிகள் கட்சியிலிருந்து விலகுவது என ஒரு மனதான முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. வரும் காலங்களில் மக்கள் சேவை செய்வதற்கு புதிய அமைப்பை ஜனநாயக முறைப்படி தொடங்கி செயல்படுத்த மாநில அளவில் M.M..இப்ராஹீம் தலைமையில் 25 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
3.அமைப்பின் பெயர் மற்றும் கொடி பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment