கடற்கரை தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் , 07-11-2014 அன்று , துபை ‘ஹார் அல் அன்ஸ்’ பகுதியில் உள்ள சகோ ஃபைசல் இல்லத்தில் தலைவர் சகோ .இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.
1."அதிரை அனைத்து மஹல்லா" (அமீரக) கூட்டமைப்பிலிருந்து (AAMF) கடற்கரை தெரு அமீரக அமைப்பு வெளியேறுவது என திர்மானிக்கப்பட்டது. கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருக்கும், இந்த (Adirai All Muhallah
Forum ) பெயரளவிலான அமைப்பினால், நமது சமுதாயத்திற்கோ / ஊருக்கு எந்த பயனுமில்லை. இதனால் கடற்கரை தெரு அமீரக அமைப்பு அனைத்து மஹல்லா கூட்டமைப்பிலிருந்து (அமீரக)வெளியேறுவது என திர்மானிக்கப்பட்டது.
2. கடற்கரை தெரு அமீரக அமைப்பானது "ஹந்துரிக்கு எதிராக" கண்டனத்தை பதிவு செய்கின்றது. மார்கத்திற்கு முரண்படும் , ஹந்துரி போன்ற அனாச்சாரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமீரகஅமைப்பின் அங்கத்தினரும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் எந்த வித பொருளாதார ஒத்துழைப்பையும் இந்த அனாச்சார நிகழ்ச்சிக்கு செய்வதில்லை என்று தீர்மானிக்கபட்டது. மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில், பிரசுரங்களை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தெருநலன் சார்ந்த பல விஷயங்கள் பேசப்பட்டு, வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்து,கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு
No comments:
Post a Comment