திருச்சி தென்னூர் தர்கா காலனி பகுதியில் பென்ஷனர் தெருவை சேர்ந்தவர் ஷாகின்சா (வயது 27). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஹனிஸ் பாத்திமா (22). இந்த தம்பதியினரின் மகள் சபர்னா (6), மகன் அர்ஷத்கான் (2½).
கடந்த 4–ந் தேதி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த அர்ஷத்கானை திடீரென காணவில்லை. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்ததை தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனின் இல்லத்திற்கு இன்று நமதூர் சேது ரோட்டை சேர்ந்த சமூக ஆர்வல இளைஞர் காலித் அஹமது, நேரடியாக சென்று நலம் விசாரித்துவிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளார்.
சந்திப்பு குறித்து 'காலித் அஹ்மது' நம்மிடம் கூறியதாவது...
சிறுவன் காணமால் போனது தொடர்பாக அதிரை பிறையில் செய்தி வெளியிட்டுருந்தோம். சிறுவன் கிடைத்த தகவலை குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்துவிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன் என்றார்.
கடந்த 4–ந் தேதி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த அர்ஷத்கானை திடீரென காணவில்லை. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்ததை தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனின் இல்லத்திற்கு இன்று நமதூர் சேது ரோட்டை சேர்ந்த சமூக ஆர்வல இளைஞர் காலித் அஹமது, நேரடியாக சென்று நலம் விசாரித்துவிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளார்.
சந்திப்பு குறித்து 'காலித் அஹ்மது' நம்மிடம் கூறியதாவது...
சிறுவன் காணமால் போனது தொடர்பாக அதிரை பிறையில் செய்தி வெளியிட்டுருந்தோம். சிறுவன் கிடைத்த தகவலை குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்துவிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன் என்றார்.
No comments:
Post a Comment