அண்ணன் கடை அதுக்கு ஏற்ற கடை! உண்மை ரிப்போர்ட்



அதிரை இளைஞர்களை சீர்கெடுக்கும் விதமாக திகழும் இந்த அண்ணன் கடை பற்றி இங்கு நாம் விரிவாக பார்ப்போம். அதிராம்பட்டினம் மிகவும் ஒழுக்க நெறிமுறைகள் கொண்ட ஊர் என்று அதனை சுற்றி உள்ள ஊர்களில் பரவலாக பேச நாம் கேட்டிருப்போம். அதுக்கு தற்பொழுது வேட்டு வைக்க துளிர்விட்டு வளர்ந்துள்ளது இந்த கடை.

மூன்றாண்டுகளுக்கு முன்வரை இது வெறும் சாதாரன பெட்டி கடையாகவே இருந்து வந்தது ஆனால் தற்பொழுது இங்கு மினி பாரே நடத்தப்படுகிறது. இந்த கடையில் கூடும் கூட்டம் மது, சிகிரெட் போன்ற பல கடும் போதை தரக்கூடிய பொருட்களையும் சூதாட்டத்திலும்   எந்த ஒரு அட்சமும் இன்றி பயன்படுத்துகின்றனர். 

அதில் பெரும்பாலும் 17 முதல் 25வயது மதிக்கத்தவர்கள் தான் அதிகம். இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கிவரும் சாராயத்தினை இங்கு வைத்து நண்பர்களுடன் அருந்துகின்றனர். இவர்களுக்கு வசதியாக தற்பொழுது இங்கு புரோட்டா கடையும் துவங்கிவிட்டனர். அதுவும் அதிராம்பட்டினத்திலேயே இங்குள்ள சால்னா தான் அதிக காரம் என்று பலராலும் பரவலாக சொல்லப்படுகிறது. 

இங்கு திருவிழா கால விற்பனையினைக்கு ஈடாக வெளிநாடு மற்றும் சென்னை போன்ற ஊர்களில் வசிக்கும் அதிரை இளைஞர்கள் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது கல்லாப்போட்டி எகுரும். வீட்டிற்கு தெரியாமல் பல சிறார்களும் இங்கு தான் தங்களது தவறான வாழ்க்கை பாதையினை துவங்குகின்றனர் என்ற தகவல் நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது. 

தங்களது உடல்களை வருத்தி பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணம் அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்தும் என்று எண்ண இங்கு தனது மகன் சீரழிவும் நிலையை அறியாமல் மாதாமாதம் செலவிற்கு என பணம் அனுப்ப அதனை அவர்கள் தவறான வழியில் செலவு செய்கின்றனர். 

இதேநிலையில் அதிரையில் தொடர்ந்தால்  இன்னும் சில வருடத்தில் இங்குள்ள பெரும்பாலானோர் போதை பழக்கத்திற்கு ஆளாவார்கள் என்பதும் சிதர்சனமான உண்மை. இவ்வாறான நிலை உருவாகாமல் இருக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முஹல்லா ஜமாத்துகள் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்தால் தான் எத்ரிகால சமுகத்தை ஒழுக்கமுடைய சமூகமாக பாதுகாக்கலாம்.

மேலும் இந்த கடையின் பின்புறத்தில் ஓய்வு அறையும் உள்ளது அதில் தான் உச்சக்கட்ட சமூதாய சீர்கேடுகளும் அரங்கேற்றப்படுகின்றன. இந்த கடை அமைந்துள்ள இடம் புறம் புறம்போக்கு இடமாகும் எனவே பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுத்து அரசிற்கு சொந்தமான இடத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook