அதிரையில் கடந்த மாதம் ஆற்று நீர் குளங்களுக்கு வருகை தந்து 5க்கும்
மேற்பட்ட குளங்கள் நிரம்பியது.இந் நிலையில் செக்கடி குளம் நிரம்பி பாசிகள்
அதிகளவில் குளங்கள் சுற்றிலும் படர்ந்து பச்சை போர்வைபோல் காட்சி
தந்தது.இதனை அகற்ற சமூக ஆர்வலர் அமீன் மற்றும் 5 இளைஞர்கள் ஒன்று இணைந்து
பாசிகளை அள்ளும் பணியில் ஒரு வார காலமாக முயற்சியில் ஈடுபட்டு தற்போது
அதிகமான பாசிகளை அப்புரவுபடுத்தி உள்ளனர்.தற்போது அந்த பாசிகள் அனைத்தும்
உரத்திற்காக கொண்டு செல்லபடுகிறது.
No comments:
Post a Comment