அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்படிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளான 11வது வார்டில் புனரமைக்கப்படாத வாய்கள் அனைத்தும் முன்பு வாக்குறுதி கொடுத்தது போல் உடனடியாக புனரமைத்து தர வேண்டும் என்பதை வலியுறித்தி பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்ய போவதாக துண்டு பிரசுரங்கள் மிகவும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டன.
இதனை கவனத்தில் கொண்ட அதிரை காவல்துறை சார்பில் தற்பொழுது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் எனவே தற்காலிமாக சாலை மறியலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment