
தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகின்றன, அதன்படி அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குபட்ட பகுதிகளில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று முதல் நடைபெற்றுவருகிறது.
இதில் முதல்கட்டமாக பேரூராட்சி அலுவலம், அரசு பொதுமருத்துவமனை, காவல்நிலையம் போன்ற அரசு நிலையங்களில் அங்குள்ள அதிகாரிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment