நிரம்பி வழியும் தருவாயில் செக்கடி குளம்
அதிரையில் சிஎம்பி வாய்கால் வழியாக ஆற்று நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் செக்கடிகுளம்முழுவதும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது.
தத்தளிக்கும் பிலால் நகர்-மீட்குமா ஏரிபுரகரை ஊராட்சி
அதிரைக்கு அருகில் இருக்கும் பிலால் நகர் பகுதி தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தால் முழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரம படுகின்றனர்.செடியன் குளம் நிரம்பி வழிந்து அந்த நீர் முழுவதும் பிலால் நகர் பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
என்னாப்பா மல?இப்படி பெய்யுது
அதிரையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டதுடன் நிலையில் தற்போது 9.00 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.பலத்த மழை காரணமாக ரோடு முழுவதும் வெள்ளம் போல் காட்சி தருகிறது.
கத்தார் நாட்டிற்க்கு ஆட்கள் தேவை
கத்தார் நாட்டிற்க்கு சிவில் சம்மந்தமான கிழ்காணும் பிரிவுகளில் வேலைக்கு ஆட்கள் தேவை இதற்கான நேர்முக தேர்வு வருகின்ற 19-12-14 வெள்ளிகிழமை அன்று சென்னை மவுண்ட் ரோடு அருகில் உள்ள வெல்லிங்க்டன் பிளாசாவில் அமைந்து உள்ள அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நம்ம ஏரியால பெஞ்சே மல கருசமணில பெய்யலப்பா
அதிரையில் இன்று பகல் சுமார் 2.00 மணி முதல் 4.00 மணி வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.அதிரையில் குறிப்பாக கால்பந்து,கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் கருசல் மணி மைதானத்தில் விளையாடி வருவது வழக்கமான ஒன்று.பொதுவாக நமது பகுதியில் மழை பெய்தால் விளையாட்டு ரத்து செய்யப்படும்.
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் இளைஞர்களுடன் சந்திப்பு
அதிரையில் இயங்கி வரும் பைத்துல்மால் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிலையில் அதிரை பகுதியை சேர்ந்த சமுதாய ஆர்வம்மிக்க இளைஞர்கள் 10 பேர் பைத்துல்மால் அலுவலகத்திற்கு வருகை தந்து பைத்துல்மால் நிர்வாகத்தை பற்றியும் சேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தஞ்சையில் PFI ஆர்ப்பாட்டம் -அதிரையர்கள் பங்கேற்ப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து தஞ்சை இரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ப்ளீஸ்...காலாண்டரை கண்காணியுங்கள் -அதிரை நஜ்முதீன்
காலாண்டர் என்பது நம் வாழ்க்கை தேவைகளை முன் வைத்து நாட்கள் மற்றும் கிழமை மாதம் வருடம் ஆகியவற்றை அறிந்து கொள்ள காலாண்டர் தேவைப்படுகிறது. இதை அதிகமானோர் அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம். அந்த காலாண்டர் மாதக்காலாண்டர் என்றும் தினசரி காலாண்டர் என்றும் வினியோகம் செய்யப்படுகிறது. அனேகமானோர் தினசரி காலாண்டரை கொடுத்து வருகிறார்கள். காலாண்டர் அச்சடிக்கப்படுகிற கம்பெணி அதிகமானோர் மாற்றுமதத்தினர்.