அதிரையில் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் நடத்திய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! (படங்கள்)


அதிரையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “அடுத்தது என்ன?” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 28-12-2016 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின் பேராசிரியரும், மாணவர்கள் நல ஆர்வலருமான பேரா.முஹம்மது ரபீக், மொழிப்பிரியன் அப்துல் ஹமீது, குழந்தை பேச்சாளர்.மஹ்மூத் அக்ரம், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தனர்
இதில் அடுத்தது என்ன படிக்கலாம்? கல்வி உதவி தொகைகள் பெறுவது எப்படி? நுழைவுத்தேர்வு என்ன? என்பது போன்ற மாணவர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பல பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 



Share:

அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் நடத்தும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! “அடுத்தது என்ன?”


அதிரையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “அடுத்தது என்ன?” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 28-12-2016 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் அடுத்தது என்ன படிக்கலாம்? கல்வி உதவி தொகைகள் பெறுவது எப்படி? நுழைவுத்தேர்வு என்ன? என்பது போன்ற மாணவர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது. 
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின் பேராசிரியரும், மாணவர்கள் நல ஆர்வலருமான பேரா.முஹம்மது ரபீக், மொழிப்பிரியன் அப்துல் ஹமீது, குழந்தை பேச்சாளர்.மஹ்மூத் அக்ரம், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.

Share:

அதிரை பெற்றோர்களே எப்போது தான் திருந்த போகிறீர்கள்???

அதிரையில் கடந்த சில மாதங்களாக தொடர் விபத்து செய்தியை நாம் இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் வாயிலாகவும் கேட்டு தான் வருகிறோம் .அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 22 வயது சிறுவர்கள், இளைஞர்கள் விபத்து செய்தியை அதிகமாக கேட்டு தான் வருகிறோம் .
அதிரையில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் விபத்து செய்தி என்பது மாதம் ஒன்று அல்லது இரண்டு வரும் இன்றோ ஒரு நாளைக்கு இரண்டு விபத்து செய்தி வரவில்லை என்ற ஆச்சிரியம் தான் .காரணம் நம்மூரில் பைக் மோகம் அதிகரித்து விட்டது பிள்ளை அடம் பிடித்த உடன் வெளிநாட்டில் இருக்கும் தகப்பன்மார்கள் தான்படும் கஷ்டத்தை பிள்ளைகளுக்கு சொல்லாமல் பிள்ளை ஆசைபடுகிறது என்று வாங்கிக் கொடுக்கிறார்கள். அதுவும் 15 வயதில் இன்று அதிரையில் ஓட்டுநர் உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் தான் அதிகம் .
*பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி:*
உங்கள் பிள்ளை 15 வயதில் பைக் வாங்கி கேட்கிறான் என்று வாங்கி கொடுக்கிறிங்களே அதே பிள்ளை 15 வயதில் திருமணம் செய்து வைக்க சொன்னால் செய்து வைப்பீர்களா ?? வைக்க மாட்டீங்க தான காரணம் குடும்பத்தை எப்படி வழி நடத்துவது அவனுக்கு தெரியாது அப்படி செய்து வைத்தாலும் வாழ்க்கை பாழாகி விடும் அதே போன்று தான் இந்த பைக் மோகமும் நீங்கள் வாங்கி கொடுத்து உங்கள் பிள்ளை வாழ்க்கையை நாசமாக ஆகி விட்டுரிங்க ..
பத்து மாதம் கஷ்டப்பட்டு உங்கள் பிள்ளைகளை பெறுவது எதற்கு ?? இப்படி கோரவிபத்தில் பலி இடுவதுக்கா?? உங்கள் பிள்ளைகள் வேகமாக சென்று மரணித்தால் இதுவும் ஒரு வித தற்கொலைக்கு சமம் தான் காரணம் விஷம் குடித்தால் மரணிப்போம் என்று அறிவோம் அதே போன்று இப்படிப்பட்ட வேகத்தால் வர கூடிய மரணமும் ..
நாங்கள் இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட விபத்துகளை சம்பவ இடத்தில் தூக்கி இருக்கிறோம் அப்போது விபத்தில் சிக்கியவர்கள் வலியினால் கதறுவதை பார்க்க முடியாது இறைவன் தான் பாதுகாக்கணும் …. உங்கள் பிள்ளை உடம்பில் ஒரு கீரல் விழுந்தால் தாங்க மாட்டீர்கள் ஆனால் இந்த பைக்கினால் விபத்து அடைந்து உயிர் இழப்பு ஏற்பட்டு உங்கள் பிள்ளைகள் உடம்பை பிரேத பரிசோதனை என்ற பெயரில் அறுக்க நீங்கள் விரும்புவீர்களா???
*பெற்றோர்களே!!* உங்கள் பிள்ளைகளுக்கு எது செய்யலாம் எது செய்ய கூடாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் நான் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை . ஆனால் இது போன்ற கோரமான விபத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள் .தொடர் விபத்துகளை பார்த்து பார்த்து மன வேதனையுடன் இந்த பதிவை நான் பதிகிறேன்..
*இளைஞர்களே* உங்கள் நண்பர்களுடன் பந்தயம் வைத்து கொண்டு பைக்கில் பறந்து செல்கிறீர்கள் அப்படி செல்லும் போது நீங்கள் விபத்தில் சிக்கினால் உங்களுடன் வருவது யார் ?? *நண்பனா அல்லது பெற்றோரா ??*நம் ஊரில் வேகத்தினால் நடக்க கூடிய விபத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள் அப்படியும் ஏன் உங்கள் வாகனத்தின் வேகம் குறைவது இல்லை?? காரணம் தெரியாமல் எனது பதிவை முடிக்கிறேன்
வேதனையுடன்,
N.காலித் அகமத்,
CBD தஞ்சை மாவட்ட செயலாளர்.
Share:

உதயமானது Adirai FM 90.4!




அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதிரை FM 90 .4 என்ற பண்பலை வானொலி துவக்க விழா பள்ளி வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கலந்து கொண்டு பண்பலை வானொலியை துவக்கி வைத்தார், முன்னதாக துவக்க விழா நிகழ்ச்சிக்கு வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை வானொலி நிலைய நிர்வாக இயக்குனர் MST தாஜுதீன் வரவேற்றார். பின்னர் வானொலி நிலைய அரங்கிற்கு வந்த அவரை காதிர்முகைதீன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியரும், வானொலி நிலைய நிகழ்ச்சி உள்ளடக்க பிரிவு தலைவர் செய்யது அகமது கபீர் சிறப்பு விருந்தினரான மாவட்ட ஆட்சியரை நேர்காணல் செய்தார், இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியரும் , முன்னாள் முதல்வருமான அப்துல் காதர் வரவேற்று பேசினார்.
பின்னர் ஏழை மக்கள் மற்றும் விவாசாயிகள் பயன்பெறும் பொருட்டு சுமார் 1000 நபர்களுக்கு விலையில்லா வானொலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இது சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்த ஏராளாமானவர்கள் பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில் கல்வி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், இமாம் ஷாபி கல்விக்கு குழும பொருளாளர் இப்ராஹிம், இயக்குனர் ரேவதி, பள்ளி முதல்வர் மீனாகுமாரி ரவி சங்கர், பொறியாளர் நஜீம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.





Share:

கருணாநிதி உடல்நல தகவலில் ஒளிவு மறைவு இருக்காது: திமுக மூத்த தலைவர் துரைமுருகன்


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த தகவல்களை ஒளிவு மறைவின்றி தெரிவிப்போம் என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தகருணாநிதி 15-ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை 'கருணாநிதிக்கு தற்போது டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்புக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு பிரத்யேக மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது' என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக மூத்த தலைவர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் காவிரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள், உறவினர்களிடம் கேட்டறிந்தனர்.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சளித் தொந்தரவு காரணமாகவே கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. அவரது உடல்நலம் குறித்து தகவல்களை ஒளிவு மறைவின்றி தெரிவிப்போம்.
வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள திமுக பொதுக்குழுவை தள்ளிவைப்பது குறித்து பரிசீலிப்போம்'' என்றார்.
Share:

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுத் துறை இயக்ககம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 8-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 30-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வுகளும் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடைகிறது. இதில் 9.15 மணி முதல் 9.25 மணி வரை மாணவர்களுக்கு வினாத்தாளை வாசிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. 9.25 முதல் 9.30 மணி வரை மாணவர்கள் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. 9.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் கேள்வித்தாளை படிக்க ஒதுக்கப்படுகிறது. காலை 10.10. முதல் 10.15 வரை மாணவர்களின் அடையாளங்கள் சரி பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது. 10.15 மணி முதல் 1.15 வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:



 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:


Share:

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இரவு 11.10 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில், "திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையிலும், நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய்த் தொற்றை சீர்செய்வதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவக் குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மருந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார்.
தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் உடல்நலக் குறைவால் கடந்த 40 நாட்களாக கருணாநிதி எவ்வித பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் யாரும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கட்சி சார்பிலும் அறிக்கை விடப்பட்டிருந்தது.
Share:

பிரதமரின் 'தனிப்பட்ட ஊழல்' குறித்த தகவல் என்னிடம் இருக்கிறது: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு


பிரதமர் நரேந்திர மோடியின் 'தனிப்பட்ட ஊழல்' குறித்து விலாவாரியான தகவல் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பண மதிப்பு நீக்கம் குறித்து மக்களவையில் பேச தனக்கு அனுமதி அளிக்கப்பட்டால் அவையில் பூகம்பம் வெடிக்கும் என ராகுல் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மீது பயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மக்களவையில் நான் வாய் திறந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் பற்றிய தகவல் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிட்டால் மோடியின் பிம்பம் சிதறிவிடும்" என்றார்.
'என்ன மாதிரியான தகவல்'
பிரதமர் நரேந்திர மோடி குறித்த தகவல்களை வெளியிடுவேன் என ராகுல் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் செய்தியாளர்கள் அவரிடம் எந்த மாதிரியான தகவல்களை வைத்துள்ளீர்கள் என வினவினர். அதற்கு பதிலளித்த ராகுல், "அது பிரதமர் மோடி தொடர்பான தனிப்பட்ட தகவல். அதை நான் மக்களவையில் மட்டுமே தெரிவிப்பேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'தனிப்பட்ட ஊழல்' குறித்து விலாவாரியான தகவல் எங்களிடம் இருக்கிறது. அதை அவையில் தெரிவிக்கவிடாமல் பிரதமர் எங்களைத் தடுத்து வருகிறார்" என்றார்.
ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை:
ராகுல் மேலும் பேசும்போது "பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கை ஏழை மக்களுக்கு எதிரானது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. அதனாலேயே பிரதமர் இவ்விவகாரத்தில் பதிலளிக்கும் நெருக்கடி இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தகையை முடிவை எடுத்துள்ள பிரதமர் அவையில் பதிலளிக்காமல் தப்பியோடிக்கொண்டே இருக்க முடியாது" என்றார்.
இசை நிகழ்ச்சிக்கு போக முடிகிறதே?
"பிரதமர் நரேந்திர மோடியால் பாப் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிகிறது, பொதுக்கூட்டங்களில் பேச முடிகிறது. ஆனால், நாடாளுமன்றத்துக்கு வரமுடியவில்லை. நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அரசும், கருவூல அமர்வும் அவை நடவடிக்கைகளை தடை செய்கிறது. போலித்தனமான பேச்சுகளை விடுத்து அவையில் அவர் பேச வேண்டும், நாங்கள் பேசவும் அனுமதிக்க வேண்டும்" என்று ராகுல் கூறினார்.
Share:

'வார்தா' புயல் பாதிப்பு: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை


'வார்தா' புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 'வார்தா' புயலின் கோரத் தாண்டவத்தால், 2810 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 492 மின் கம்பங்களும், 175 தெரு மின் விளக்கு கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டன. மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வளாகங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும், பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
Share:

வார்தா' புயல் பாதிப்பு: மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
'வார்தா' புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
முதல்கட்டமாக கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலைப் பகுதியைப் பார்வையிட்டார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டதைப் பார்வையிட்டதோடு, பணிகளை துரிதப்படுத்தினார்.
அடுத்த கட்டமாக, மணலியில் உள்ள நிவாரண முகாம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அங்கிருந்து பழவேற்காடு சென்ற அவர் பாதிப்புகளை பார்வையிட்டார்.
பொன்னேரியில் மீனவர்கள் படகுகள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
வனத்துறை அமைச்சர் சீனிவாசன், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் முதல்வருடன் நேரில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

Share:

மரண அறிவிப்பு!(ஹாஜி .சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி அவர்கள்)

சே.மு.மீ.மர்ஹும்.அபூபக்கர் அவர்களுடைய மகனும் மர்ஹும்.M.S.ஹாஜி சுல்தான் இப்ராஹிம் அவர்களுடைய மருமகனும் சே.மு.மீ.ஜாஹிர் ஹுசைன், ஷேக் அப்துல்லாஹ் ஆகியோரின் சகோதரரும் M.B.அபூபக்கர் அவர்களுடைய தகப்பனாருமான ஹாஜி .சே.மு.மீ.செய்யது முகம்மது புஹாரி அவர்கள் இன்று இரவு ஆலடி தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


Share:

சென்னையின் சில பகுதிகளில் மின் விநியோகம் சீரானது


சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், மாம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.
வார்தா புயலால் சென்னையிலும் புறநகரிலும் பரவலாக பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்துள்ளன. இதனால் தடைபட்ட மின்சாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் சீராகும் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், மாம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையின் பிற பகுதிகளிலும் மின் விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

'வார்தா' புயலுக்கு சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 13 பேர் பலி



ஓடிக்கொண்டிருந்த வாகனம் மீது மரம் விழுந்தது. இதில் வந்த வாகன ஓட்டி நூலிழையில் தப்பினார்.
'வார்தா' புயலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 13 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை மூலக்கடையில் குளிர் தாங்காமல் ஒருவரும், ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் வீடு இடிந்து ஆண் ஒருவரும், சூளைமேட்டில் சுவர் இடிந்து ஒரு பெண்ணும், வடபழனியில் சுவர் இடிந்து ஒரு குழந்தையும், தண்ணீரில் மூழ்கி ஒருவரும், மீனம்பாக்கத்தில் விளம்பர போர்டு விழுந்து ஒருவரும் இறந்துள்ளனர்.
வில்லிவாக்கம் அருகே கொளத்தூர் செல்வி நகரில் விளக்கு கம்பம் விழுந்து வைகுண்டநாதன் (42) என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் போரூரில் சுவர் இடிந்து பொறியாளர் ராஜசேகரன் (23), செங்கல்பட்டு மேல்மெய்யூரில் அஸ்வதி (8) என்ற சிறுமி ஆகியோர் சுவர் இடிந்து பலியாகி உள்ளனர். சோழவரத்தில் ஒருவரும், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் ஒருவர் உட்பட மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர்.
இதே போல சுவர் மற்றும் மரங்கள் விழுந்து இடிபாடுகளில் சிக்கி 86 பேர் காயம் அடைந்துள்ளனர். புயலின்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பலர் கீழே விழுந்தனர்.
Share:

வானிலை முன்னறிவிப்பு: நான்கு மாவட்டங்களில் மழை வாய்ப்பு

'வார்தா' புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கலில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அருகே திங்கள்கிழமை கரையைக் கடந்த வார்தா புயல், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டத்தில் தருமபுரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழந்துக்கொண்டே செல்லக்கூடும்.
வார்தா புயல் கரையைக் கடந்தபோது, நுங்கம்பாக்கத்தில் பதிவான காற்றின் வேகத்தின்படி, புயலின் மேற்கு பகுதி கடந்தபோது மணிக்கு 114 கிமீ வேகத்திலும், கிழக்கு பகுதி நகர்ந்து சென்றபோது அதிகபட்சமாக 72 கிமீ வேகத்திலும் காற்று வீசியது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்தில் 38 செமீ, கேவிகே காட்டுப்பாக்கத்தில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வடக்கு உள் தமிழக மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கலில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்'' என்று பாலச்சந்திரன் கூறினார்.
Share:

'வார்தா' புயல் தாண்டவம்: பலத்த காற்று, கனமழையால் சென்னை தத்தளிப்பு


அதிதீவிர 'வார்தா' புயல் திங்கள்கிழமை மாலை கரையைக் கடந்தது. சூறைக்காற்றாலும் கனமழையாலும் தத்தளித்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மாலை 6.30 மணியளவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிதீவிர வார்தா புயல் சென்னை அருகே மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது.
வார்தா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தொடரும். காற்றின் வேகம் மணிக்கு 60-ல் இருந்து 70 கிலோமீட்டராக குறையும்" என்றார் அவர்.
புயல் பாதிப்புக்கான ஹெல்ப்லைன்கள்:
சென்னை மாநகராட்சி வாட்ஸப் எண்கள்: 94454 77207, 94454 77203, 94454 77206 , 94454 77201, 94454 77205
சென்னை மாநகராட்சி அவசர உதவி தொலைபேசி எண்கள் - 25619206, 25619511 , 25384965 ,25383694, 25367823, 25387570
புதுச்சேரி : 1077, 1070 | கடலூர் | 1077, 04142 220700, 231666
22 ஆண்டுகளுக்கு பிறகு...
இதற்கிடையே மத்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், சென்னையில் 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு, இதுபோன்ற மோசமான புயலை சென்னை சந்தித்த தகவலும் வெளியாகியுள்ளது.
முதல்வர் வேண்டுகோள்:
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.
புயலின் கோர தாண்டவம்...
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு 'வார்தா புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.
இந்த வர்தா புயல் கரையை நெருங்க, நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. திங்கள்கிழமை காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது.
ஆயிரக்கணகான மரங்கள் சாய்ந்தன...
சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூரைக்காற்று பேயாட்டம் ஆடியது. கனமழையம் கொட்டித் தீர்த்து. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அவசரம் கருதி வெளியில் வந்தவர்களின் வாகனங்கள், ஆங்காங்கே திருப்பி விடப்பட்டன. விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். அவர்கள் அறுவை இயந்திரங்கள் மூலமாக அறுத்து, ஜேசிபி இந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.
வீடுகளிலேயே முடங்கிய மக்கள்
இந்த புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் கூட, அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.
நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கி, நிம்மதியாக இருந்தனர். முன்கூட்டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டிய வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
அமைச்சர்கள் ஆய்வு:
சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதி தீவிர 'வார்தா' புயலின் தாக்கத்தால் மிக பலத்த காற்று மற்றும் கன மழையின் எதிரொலியாக, சென்னையில் ஏற்பட்ட சேதங்களின் புகைப்படத் தொகுப்பு 

முந்தையச் செய்திப் பதிவுகள் (மாலை 5 மணி):
வார்தா புயல் தாண்டவமாடுவதன் விளைவாக, சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு, இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது.
அதிதீவிர 'வார்தா' புயலின் மையப்பகுதி திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் இப்போது கிழக்குப் பகுதியைக் கடந்துகொண்டிருக்கிறது. மாலை 6.30 மணியளவில் புயல் முற்றிலும் கடந்துவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் 5 மணியளவில் தெரிவித்தது.
இந்தத் தகவலை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புயல் கரையைக் கடக்கும் வரை காற்றின் வேகம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மரக்காணம் வரை மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
காற்றின் வேகம் 70-ல் இருந்து 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். இது 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
சென்னையில் பிற்பகல் 3.20-ல் இருந்து 4.20 வரை சற்றே அமைதி நிலவி வந்த சூழலில், மீண்டும் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கனமழையும் நீடிக்கிறது.
ஒட்டுமொத்தமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிட்டது. எல்லா விதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முந்தையச் செய்திப் பதிவுகள் (3.30 மணி):
அதிதீவிர புயலான வார்தா சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. தற்போது, புயலின் மையப் பகுதி கடந்து வருகிறது. புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்போது அமைதி நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மணிக்குப் பின் புயலின் மூன்றாவது பகுதி கரையைக் கடக்கும்.
இதற்கிடையில் வார்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்தபோது 192 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு 3 மணி நிலவரம்:
வார்தா புயலில் மையப் பகுதி தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வார்தா புயலின் மேற்குப் பகுதி கரையைக் கடந்துவிட்டது. மையப் பகுதி தற்போது கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. 3 முதல் 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். மாலை 4 மணி முதல் 7 மணி வரை வார்தாவின் கிழக்குப் பகுதி கரையைக் கடக்கும். அப்போது பலத்த காற்று வீசும். இவ்வாறாக படிப்படியாக மூன்று நிலைகளில் வார்தா கரையை கடக்கும். இரவு 11.30 மணியளவில் வார்தா புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* புயல் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 266 முகாம்களில் 95 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று மாவட்டங்களில் 8008 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
* சென்னையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடையாறு திருவிக பாலத்தில் மின் கம்பங்கள் சாய்ந்தன.
வார்தா புயல் காரணமாக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
* சென்னை சாந்தோம், ராதாகிருஷ்ணன், கதீட்ரல் சாலைகளில் மரங்கள் விழுந்திருப்பதால் வேறு பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பி.தம்பி, "2.30 மணிக்கு மேல் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். புயல் முழுமையாக கடந்து செல்ல மாலை 6 மணியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
* சென்னையில் நகர் முழுவதும் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாக அதிமுக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* "சென்னை வாழ் பொதுமக்கள் இன்று (12.12.2016) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை மறு அறிவிப்பு வரும் வரை தங்களது வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே வெளியே சென்றவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய முன்னறிவிப்பு:
வார்தா புயல் பிற்பகல் 3.30 மணிக்கு மையப் பகுதி கரையைக் கடக்கும்
புயலின் மொத்த சுற்றளவு 90. கி.மீ அளவில் உள்ளது
புயலின் தாக்கம் 6 மணி வரை இருக்கும்
* வார்தா புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* சென்னையில் பலத்த சூறைக் காற்று வீசிவருவதால் காற்றின் வேகம் குறைந்த பிறகே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
* வார்தா புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணிக்கு கரையைக் கடக்கும் தற்போது புயலின் ஒரு பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பலத்த காற்று வீசி வருகிறது. மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது.
சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
* செயற்கைக்கோள் புகைப்படத்தின் தகவலின்படி வார்தா புயல் கரையைக் கடந்துவிட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
* "வார்தா புயல் இன்று காலை 9.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 87 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வார்தா புயலானது இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால் தெற்கு ஆந்திரா, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 1 மீ. உயரத்துக்கு எழக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* பகல் 2 மணி முதல் 5 மணிக்கு இடையே வார்தா புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குகிறது.
* சென்னை நேப்பியர் பாலம் - காமராஜர் சாலையில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 87 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* உதவி எண்கள் அறிவிப்பு:
வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள்:
044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570
வாட்ஸ் அப் எண்கள்:
94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207
* ரயில்கள் ரத்து:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:
ரயில் எண்: 66026 - சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் - முழுமையாக ரத்து
ரயில் எண் 12711 - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 12712 - மதியம் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 66030 - நெல்லூர் - சூலூர்பேட்டை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* காலை 9.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* 'வார்தா' புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற வீதத்திலேயே ரயில் இயக்கப்படுகிறது.
வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* வார்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா'என்று அர்த்தம்.
* சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில்: வார்தா புயல் சென்னைக்கு அருகே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
* மணிக்கு 13 கி.மீ வேகத்தில்: வார்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தற்போது முன்னேறி வருகிறது. அது இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி:
கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வார்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வார்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்திலுள்ள துறைமுகங்களுக்கு 11-வது முறையாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மிக அபாயகரமான எச்சரிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக் கால் ஆகிய துறைமுகங்களில் 8-ம் எண், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அந்த துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படங்கள்: எல். சீனிவாசன்
Share:

இருளில் மூழ்கிய சென்னை நகரம்: மின் இணைப்பு துண்டிப்பு


வார்தா புயல் ஏற்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூரிய வெளிச்சமும் இல்லாததால் பகலிலேயே சென்னை நகரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
வார்தா புயல் 12-ம் தேதி பிற்பகல் சென்னையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. கூடவே சாரல் மழையும் பெய்தது. நள்ளிரவு முதல் கன மழை கொட்டியது. காற்றும் வேகமாக வீசியது.
இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால், இருள் சூழ்ந்தது. பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.
காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதியில் இருந்த பல மின் இணைப்பு பெட்டிகள் நீரில் மூழ்கின. மின் அதிகாரிகள் அதை உடனடியாக கண்டறிந்து மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் தேங்கி நின்ற நீரை அப்புறப்படுத்தி சரி செய்தனர். பல இடங்களில் மின் மாற்றிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனாலும் மின் விநியோகம் தடைபட்டது.
மேலும் மழை காரணமாக சூரிய வெளிச்சம் இல்லை. இதனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பகலிலேயே இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் உடல் நலமில்லாதவர்கள், முதியவர்கள், கர்பிணிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
Share:

வர்தா புயல்: காற்றின் வேகம் தாங்காமல் தடுமாறி விழுந்து 36 பேர் காயம்


சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் தற்போது சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் பழவேற்காடு கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இரவு முதல் காலை வரை சென்னையில் 7.5 செமீ மழை பதிவாகியுள்ளது. 

முறிந்த விழுந்த மரம் 

காற்று பலமாக வீசுவதால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றின் வேகம் தாங்காமல் மரம் முறிந்து வீட்டில் மேல் விழுகிறது. அந்த வீட்டில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. 

36 பேர் காயம்

புயல் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் வீட்டை விட்டு வெளியேறி இருசக்கர வாகனங்களில் பயணித்தனர். காற்றின் வேகம் தாங்காமல் பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுவரை 36 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 



Share:

வார்தா கரை கடப்பது எப்போது?- சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

வார்தா புயல் எப்போது கரை கடக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "வார்தா புயல் இன்று காலை 9.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 87 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வார்தா புயலானது இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கு. இதனால் தெற்கு ஆந்திரா, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 1 கி.மீ. உயரத்துக்கு எழக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் கரையைக் கடந்து பிறகும் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் ஒரு சில மணி நேரங்களுக்கு பலத்த காற்று வீசும். புயல் கரையைக் கடந்த 6 மணி நேரத்துக்குப் பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை, அதிகனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்றார்.
Share:

புயலின் போது பின்பற்ற வேண்டியதும் செய்யக் கூடாததும்

அதி தீவிர புயலான 'வார்தா' திங்கள்கிழமை பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த 10 முக்கியத் தகவல்கள்.
1. கனத்த மழையின் போது வெளியே செல்லாதீர்கள். வீட்டுக்குள்ளேயே கவனமாக இருக்கவும். கதவு, ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கவும்.

2. குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுப்பாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் அருகிலோ, நீர்நிலைப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
3. போதுமான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துங்கள்.
4. மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டால், தண்ணீருக்காக சிரமப்படத் தேவையிருக்காது.
5. எமர்ஜன்ஸி விளக்குகள், மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். போதுமான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் அருகிலேயே இருக்கட்டும்.
6. வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பாமல், அரசு அதிகாரிகளின் முறையான அறிவிப்பைக் கேட்டபிறகே வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
7. போக்குவரத்துக்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
8. அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
9. மக்கள் மழைக்கு ஒதுங்க வேண்டிய நேரத்தில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்பது தவறு.
10. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் இட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
Share:

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


வார்தா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (இன்று) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த மூன்று மாவட் டங்களில் உள்ள தனியார் நிறு வனங்களுக்கும் திங்கள்கிழமை ஒருநாள் விடுமுறை விடுமாறு மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை மேற் கொள்ள சென்னை, திருவள்ளூ ருக்கு தலா 2 குழுக்கள், காஞ்சிபுரத்துக்கு ஒரு குழு என, தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்ப அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதே போல், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், திருவள்ளூரில் ஒரு குழுவும், சென்னையில் இதர குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தேவையான இடங்களில் படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
Share:

கரை கடக்கவிருக்கும் 'வார்தா' அதிதீவிர புயல்: மக்கள் கவனிக்க சில முக்கிய தகவல்கள்

சென்னை அண்ணாசாலை | படம்: எல்.சீனிவாசன்



அதிதீவிர புயலான வார்தா, இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 87 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
* உதவி எண்கள் அறிவிப்பு:
வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள்:
044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570
வாட்ஸ் அப் எண்கள்:
94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207,
* ரயில்கள் ரத்து:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:
ரயில் எண்: 66026 - சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் - முழுமையாக ரத்து
ரயில் எண் 12711 - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 12712 - மதியம் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி என்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 66030 - நெல்லூர் - சூலூர்பேட்டை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* காலை 9.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* 'வார்தா' புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற வீதத்திலேயே ரயில் இயக்கப்படுகிறது.
வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* வார்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா'என்று அர்த்தம்.
* சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில்: வார்தா புயல் சென்னைக்கு அருகே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
* மணிக்கு 13 கி.மீ வேகத்தில்: வார்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தற்போது முன்னேறி வருகிறது. அது இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி:
கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வார்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வார்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வார்தா புயலானது சென்னை அருகே கரையைக் கடக்கவிருக்கிறது.
10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்திலுள்ள துறைமுகங்களுக்கு 11-வது முறையாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மிக அபாயகரமான எச்சரிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக் கால் ஆகிய துறைமுகங்களில் 8-ம் எண், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அந்த துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share:

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook