ஓடிக்கொண்டிருந்த வாகனம் மீது மரம் விழுந்தது. இதில் வந்த வாகன ஓட்டி நூலிழையில் தப்பினார்.
'வார்தா' புயலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் சேர்த்து 13 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை மூலக்கடையில் குளிர் தாங்காமல் ஒருவரும், ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் வீடு இடிந்து ஆண் ஒருவரும், சூளைமேட்டில் சுவர் இடிந்து ஒரு பெண்ணும், வடபழனியில் சுவர் இடிந்து ஒரு குழந்தையும், தண்ணீரில் மூழ்கி ஒருவரும், மீனம்பாக்கத்தில் விளம்பர போர்டு விழுந்து ஒருவரும் இறந்துள்ளனர்.
வில்லிவாக்கம் அருகே கொளத்தூர் செல்வி நகரில் விளக்கு கம்பம் விழுந்து வைகுண்டநாதன் (42) என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் போரூரில் சுவர் இடிந்து பொறியாளர் ராஜசேகரன் (23), செங்கல்பட்டு மேல்மெய்யூரில் அஸ்வதி (8) என்ற சிறுமி ஆகியோர் சுவர் இடிந்து பலியாகி உள்ளனர். சோழவரத்தில் ஒருவரும், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் ஒருவர் உட்பட மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர்.
இதே போல சுவர் மற்றும் மரங்கள் விழுந்து இடிபாடுகளில் சிக்கி 86 பேர் காயம் அடைந்துள்ளனர். புயலின்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பலர் கீழே விழுந்தனர்.
No comments:
Post a Comment