அதிரையில் கடந்த சில மாதங்களாக தொடர் விபத்து செய்தியை நாம் இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் வாயிலாகவும் கேட்டு தான் வருகிறோம் .அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 22 வயது சிறுவர்கள், இளைஞர்கள் விபத்து செய்தியை அதிகமாக கேட்டு தான் வருகிறோம் .
அதிரையில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் விபத்து செய்தி என்பது மாதம் ஒன்று அல்லது இரண்டு வரும் இன்றோ ஒரு நாளைக்கு இரண்டு விபத்து செய்தி வரவில்லை என்ற ஆச்சிரியம் தான் .காரணம் நம்மூரில் பைக் மோகம் அதிகரித்து விட்டது பிள்ளை அடம் பிடித்த உடன் வெளிநாட்டில் இருக்கும் தகப்பன்மார்கள் தான்படும் கஷ்டத்தை பிள்ளைகளுக்கு சொல்லாமல் பிள்ளை ஆசைபடுகிறது என்று வாங்கிக் கொடுக்கிறார்கள். அதுவும் 15 வயதில் இன்று அதிரையில் ஓட்டுநர் உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் தான் அதிகம் .
*பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி:*
உங்கள் பிள்ளை 15 வயதில் பைக் வாங்கி கேட்கிறான் என்று வாங்கி கொடுக்கிறிங்களே அதே பிள்ளை 15 வயதில் திருமணம் செய்து வைக்க சொன்னால் செய்து வைப்பீர்களா ?? வைக்க மாட்டீங்க தான காரணம் குடும்பத்தை எப்படி வழி நடத்துவது அவனுக்கு தெரியாது அப்படி செய்து வைத்தாலும் வாழ்க்கை பாழாகி விடும் அதே போன்று தான் இந்த பைக் மோகமும் நீங்கள் வாங்கி கொடுத்து உங்கள் பிள்ளை வாழ்க்கையை நாசமாக ஆகி விட்டுரிங்க ..
பத்து மாதம் கஷ்டப்பட்டு உங்கள் பிள்ளைகளை பெறுவது எதற்கு ?? இப்படி கோரவிபத்தில் பலி இடுவதுக்கா?? உங்கள் பிள்ளைகள் வேகமாக சென்று மரணித்தால் இதுவும் ஒரு வித தற்கொலைக்கு சமம் தான் காரணம் விஷம் குடித்தால் மரணிப்போம் என்று அறிவோம் அதே போன்று இப்படிப்பட்ட வேகத்தால் வர கூடிய மரணமும் ..
நாங்கள் இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட விபத்துகளை சம்பவ இடத்தில் தூக்கி இருக்கிறோம் அப்போது விபத்தில் சிக்கியவர்கள் வலியினால் கதறுவதை பார்க்க முடியாது இறைவன் தான் பாதுகாக்கணும் …. உங்கள் பிள்ளை உடம்பில் ஒரு கீரல் விழுந்தால் தாங்க மாட்டீர்கள் ஆனால் இந்த பைக்கினால் விபத்து அடைந்து உயிர் இழப்பு ஏற்பட்டு உங்கள் பிள்ளைகள் உடம்பை பிரேத பரிசோதனை என்ற பெயரில் அறுக்க நீங்கள் விரும்புவீர்களா???
*பெற்றோர்களே!!* உங்கள் பிள்ளைகளுக்கு எது செய்யலாம் எது செய்ய கூடாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் நான் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை . ஆனால் இது போன்ற கோரமான விபத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள் .தொடர் விபத்துகளை பார்த்து பார்த்து மன வேதனையுடன் இந்த பதிவை நான் பதிகிறேன்..
*இளைஞர்களே* உங்கள் நண்பர்களுடன் பந்தயம் வைத்து கொண்டு பைக்கில் பறந்து செல்கிறீர்கள் அப்படி செல்லும் போது நீங்கள் விபத்தில் சிக்கினால் உங்களுடன் வருவது யார் ?? *நண்பனா அல்லது பெற்றோரா ??*நம் ஊரில் வேகத்தினால் நடக்க கூடிய விபத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள் அப்படியும் ஏன் உங்கள் வாகனத்தின் வேகம் குறைவது இல்லை?? காரணம் தெரியாமல் எனது பதிவை முடிக்கிறேன்
வேதனையுடன்,
N.காலித் அகமத்,
CBD தஞ்சை மாவட்ட செயலாளர்.
N.காலித் அகமத்,
CBD தஞ்சை மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment