வலுவிழக்கிறது 'நாடா' புயல்: கடலோரப் பகுதிகளில் கனமழை நீடிப்பு


தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான 'நாடா' புயல் வலுவிழந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி கனமழை நீடிக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த நாடா புயல், மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இநதப் புயல் தற்போது வலுவிழக்கத் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை தொடங்கி விட்டுவிட்டு கனமழை கொட்டி வருவதால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை பெய்தாலும், கடந்த ஆண்டைப்போல அதிகனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று பாலசந்திரன் நேற்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழக அமைச்சர் அறிவுறுத்தல்:
இதனிடையே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், "அரசின் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
பேரிடர் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். மின் கம்பங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மழை தொடர்பாக மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார்.
முந்தையச் செய்திகள்:
நாடா புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், எண்ணூர், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறும்போது, "வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நாடா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியை ஒட்டியுள்ள மரக்காணம், வானூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது" என்றார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'புயல் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்தி, நிவாரண மையங்களில் தங்க வைக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன்கள்...
அவசர நிலை ஏற்படும்போது 1070, 1077 ஆகிய இலவச தொலைபேசி எண்களை பொது மக்கள் தொடர்புகொள்ளலாம். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அவர்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். ஆட்சியர் அறிவுறுத்தல்படி, பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்க வேண்டும்.
இரு தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒரு மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை கடலூர், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓமன் சூட்டிய 'நாடா' பெயர்
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், புயல்களுககு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து புயலுக்கு பெயர் வைக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பரில் உருவான புயலுக்கு 'கியாந்த்' என மியான்மர் நாடு பெயரிட்டது. தற்போது உருவாகியுள்ள புயலுக்கு 'நாடா' என்ற பெயரை ஓமன் சூட்டியுள்ளது. நாடா என்பதற்கு ஓமன் மொழியில் 'பெருந்தன்மை' என்று பொருளாம் அடுத்த புயலுக்கு 'வர்தா' என பாகிஸ்தான் பெயர் சூட்டு
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook