தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுத் துறை இயக்ககம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 8-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 30-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வுகளும் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடைகிறது. இதில் 9.15 மணி முதல் 9.25 மணி வரை மாணவர்களுக்கு வினாத்தாளை வாசிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. 9.25 முதல் 9.30 மணி வரை மாணவர்கள் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது. 9.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் கேள்வித்தாளை படிக்க ஒதுக்கப்படுகிறது. காலை 10.10. முதல் 10.15 வரை மாணவர்களின் அடையாளங்கள் சரி பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது. 10.15 மணி முதல் 1.15 வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:



No comments:
Post a Comment