சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். தினமும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவல் கிடைத்ததும், கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தினார்கள்.
இதற்கிடையே ஜெய லலிதாவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.
முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்கு பின்னரே, அதன் தாக்கத்தை உணர முடியும்.ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது அப்பல்லோ மருத்துவமனை தகவல் அப்பல்லோ மருத்துவமனை தனது இன்று காலை வெளீயிடபட்ட புதிய அறிக்கையில் கூறபட்டு இருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள டுவிட்டர் தகவலில் மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பிறகும் முதலவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். என கூறி உள்ளார்.
இந்த நிலை மாலை 5-25 மணிக்கு முதல்-அமைஅச்சர் ஜெயலலிதா காலமானதாக தகவல் வெளியானது.அனைத்து செய்தி சேனல்களிலும் இந்த தகவல்வெளியானது.ஆனால் இந்த்ச் எய்தி அதிகார பூர்வமில்லை எனதெரிவிக்கபட்டது.இதை தொடர்ந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடபட்டது.
இதை தொடர்ந்து ஜெயலலிதா காலமான என்ற செய்தியை மறுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடபட்டது.அதில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது. முதல்வருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிர்காக்கும் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது என கூறபட்டுஇருந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். தினமும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவல் கிடைத்ததும், கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தினார்கள்.
இதற்கிடையே ஜெய லலிதாவுக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.
முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரத்திற்கு பின்னரே, அதன் தாக்கத்தை உணர முடியும்.ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது அப்பல்லோ மருத்துவமனை தகவல் அப்பல்லோ மருத்துவமனை தனது இன்று காலை வெளீயிடபட்ட புதிய அறிக்கையில் கூறபட்டு இருந்தது.
அப்பல்லோ மருத்துவமனை துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள டுவிட்டர் தகவலில் மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பிறகும் முதலவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். என கூறி உள்ளார்.
இந்த நிலை மாலை 5-25 மணிக்கு முதல்-அமைஅச்சர் ஜெயலலிதா காலமானதாக தகவல் வெளியானது.அனைத்து செய்தி சேனல்களிலும் இந்த தகவல்வெளியானது.ஆனால் இந்த்ச் எய்தி அதிகார பூர்வமில்லை எனதெரிவிக்கபட்டது.இதை தொடர்ந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடபட்டது.
இதை தொடர்ந்து ஜெயலலிதா காலமான என்ற செய்தியை மறுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடபட்டது.அதில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது. முதல்வருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிர்காக்கும் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது என கூறபட்டுஇருந்தது.
No comments:
Post a Comment