![]() |
தமிழக அமைச்சரவைக் கூட்டம் |
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. இதில் ஜெ. மறைவுக்கு 13 பக்கம் கொண்ட இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
ஓபிஎஸ் தலைமையில் காலை 11.30 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம் 50 நிமிடங்கள் நடந்தது. இதில் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் மற்றும் சில துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்கு 13 பக்கம் கொண்ட இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைப்பது, ஜல்லிக்கட்டு, காவிரி விவகாரம், பட்ஜெட் கூட்டத்தொடர், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது'' என்று தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் தங்கள் அறைக்குச் சென்று கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி ஜிஎஸ்டி மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பாக முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment