உதயமானது Adirai FM 90.4!




அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதிரை FM 90 .4 என்ற பண்பலை வானொலி துவக்க விழா பள்ளி வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கலந்து கொண்டு பண்பலை வானொலியை துவக்கி வைத்தார், முன்னதாக துவக்க விழா நிகழ்ச்சிக்கு வந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை வானொலி நிலைய நிர்வாக இயக்குனர் MST தாஜுதீன் வரவேற்றார். பின்னர் வானொலி நிலைய அரங்கிற்கு வந்த அவரை காதிர்முகைதீன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியரும், வானொலி நிலைய நிகழ்ச்சி உள்ளடக்க பிரிவு தலைவர் செய்யது அகமது கபீர் சிறப்பு விருந்தினரான மாவட்ட ஆட்சியரை நேர்காணல் செய்தார், இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்த்துறை ஆசிரியரும் , முன்னாள் முதல்வருமான அப்துல் காதர் வரவேற்று பேசினார்.
பின்னர் ஏழை மக்கள் மற்றும் விவாசாயிகள் பயன்பெறும் பொருட்டு சுமார் 1000 நபர்களுக்கு விலையில்லா வானொலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இது சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்த ஏராளாமானவர்கள் பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில் கல்வி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், இமாம் ஷாபி கல்விக்கு குழும பொருளாளர் இப்ராஹிம், இயக்குனர் ரேவதி, பள்ளி முதல்வர் மீனாகுமாரி ரவி சங்கர், பொறியாளர் நஜீம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.





Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook