அதிதீவிர புயலான வார்தா, இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.
* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 87 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
* உதவி எண்கள் அறிவிப்பு:
வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொலைபேசி எண்கள்:
044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570
வாட்ஸ் அப் எண்கள்:
94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207,
* ரயில்கள் ரத்து:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:
ரயில் எண்: 66026 - சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் - முழுமையாக ரத்து
ரயில் எண் 12711 - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 12712 - மதியம் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி என்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 66030 - நெல்லூர் - சூலூர்பேட்டை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* காலை 9.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
* 'வார்தா' புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற வீதத்திலேயே ரயில் இயக்கப்படுகிறது.
* வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* வார்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
* வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா'என்று அர்த்தம்.
* சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில்: வார்தா புயல் சென்னைக்கு அருகே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
* மணிக்கு 13 கி.மீ வேகத்தில்: வார்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தற்போது முன்னேறி வருகிறது. அது இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி:
கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வார்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வார்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வார்தா புயலானது சென்னை அருகே கரையைக் கடக்கவிருக்கிறது.
10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்திலுள்ள துறைமுகங்களுக்கு 11-வது முறையாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மிக அபாயகரமான எச்சரிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக் கால் ஆகிய துறைமுகங்களில் 8-ம் எண், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அந்த துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment