சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், மாம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.
வார்தா புயலால் சென்னையிலும் புறநகரிலும் பரவலாக பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்துள்ளன. இதனால் தடைபட்ட மின்சாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் சீராகும் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், மாம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையின் பிற பகுதிகளிலும் மின் விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment