சென்னை அருகே கரையைக் கடக்கிறது ‘வார்தா’ புயல்


மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை | தயார் நிலையில் தேசிய பேரிடர், மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள்

அதிதீவிர புயலான வார்தா, இன்று பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளதால், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மற்றும் விழுப் புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள் ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப் படையில் செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியி்ல் உரு வான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வார்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வார்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிகனமழை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது, நாளை (இன்று) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து நாளை (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும், கடல் சீற்றமானது, இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கக் கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, வார்தா புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை களை தமிழக அரசு தொடங்கி யுள்ளது. இது தொடர்பாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந் தது. கூட்ட முடிவில், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறியதாவது:
காற்று அதிவேகத்தில் வீசக் கூடும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இதுதவிர, தீயணைப்புத்துறை யினர், பயிற்சி பெற்ற 1,300 காவ லர்கள் என அனைவரும் ஆங் காங்கே பணியமர்த்தப்படுகின்ற னர். புயல் காற்றால் மின் கம்பங்கள் பாதிக்கப்படும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான தங்குமிடங்கள் தயாராக உள்ளன. மண்டல அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள், முதல்கட்ட தகவல் அளிப்பவர்கள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாரம் தடைபடும் என்பதால், பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் மேல் நிலைத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தகவல் அளித்துள்ளோம். மீறியும் சிலர் ஆழ்கடல் செல்கின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள முதல் தகவல் அளிக்கும் நபர்கள் மூலம் மீனவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. ஆழ்கடலுக்கு யாராவது சென்றிருந்தால் கடலோர காவல்படை மூலம் மீனவர்களை கரைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வருவாய்த்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக அத்துறை செயலர் பி.சந்திரமோகன் கூறும்போது, ‘‘வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்பதால் அந்த மாவட்ட நிர்வாகங்களும் எச்சரிக்கையுடன் இருக்க அம்மாவட்ட கள அதிகாரி களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது’’ என்றார்.
தமிழகத்தில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
வார்தா புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகை யில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 4 நிலைகளில் அடையாளம் காணப்பட்டு, தேவையான மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. தற்போதைய வானிலை அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன. தேவையான உணவு, சுகாதார வசதிகள், தங்குமிடங்களில் செய்யப்பட்டுள்ளன. வார்தா புயலில் இருந்து மக்களை 100 சதவீதம் பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும். மாநில அளவில் 1070, மாவட்ட அளவில் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களி்ல் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான உதவியை நாடலாம். நவம்பர் மாதம் போதுமான மழை கிடைக்காமல் பற்றாக்குறை நிலவியது. டிசம்பரில் கூடுதல் மழை கிடைத்தாலும் அதை உரிய முறையில் பாதுகாத்து, மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்திலுள்ள துறைமுகங் களுக்கு 11-வது முறையாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மிக அபாயகரமான எச்சரிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக் கால் ஆகிய துறைமுகங்களில் 8-ம் எண், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அந்த துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook